Village Missionary Movement

கிராம மிஷனரி இயக்கம்


இன்றைய தியானம்(Tamil)  20-11-2020 (Romans Special)

இன்றைய தியானம்(Tamil)  20-11-2020 (Romans Special)

ஐக்கியமா?  

“மாம்சம் ஆவிக்கு விரோதமாகவும், ஆவி மாம்சத்துக்கு விரோதமாகவும் இச்சிக்கிறது;…இவைகள் ஒன்றுக்கொன்று விரோதமாயிருக்கிறது” - கலாத்தியர் 5:17

ஒரு ஊரில் ஒரு தவளையும் எலியும் இணைபிரியாத நண்பர்களாக இருந்தன. நட்பிற்கு அடையாளமாக தவளையின் ஒரு காலை எலியின் ஒரு காலோடு கட்டிக்கொண்டன. ஆகவே எங்கு சென்றாலும் சேர்ந்தே சென்றுகொண்டிருந்தன. இதை பார்த்த மற்ற பிராணிகளுக்கு ஆச்சரியமாயிருந்தது. தவளை ஒரு இருவாழ்வி, ஆனால் எலி அப்படியல்ல, இருப்பினும் இரண்டும் இவ்வளவு ஐக்கியமாயிருக்கிறதே என்பதே ஆச்சரியத்திற்கு காரணம். வெயில் அதிகமாக இருந்த ஒருநாளில் இரண்டும் குளக்கரைக்கு சென்றன. தண்ணீரைப் பார்த்தவுடன் தவளை தண்ணீரில் குதித்தது. எலியும் சேர்ந்து அதோடு இழுக்கப்பட்டது. தவளை ஜாலியாக நீந்தியது. எலி மரணத்தை சந்தித்தது. மறுநாள் காலையில் தண்ணீரில் மிதந்த எலியைப் பார்த்த கழுகு ஒன்று தன் கூரிய அலகால் கொத்தி தூக்கிச் சென்றது. அதோடு சேர்ந்து தவளையும் அதற்கு உணவாகிவிட்டது. ஆம், ஒன்றுக்கொன்று விரோதமாயுள்ளவைகளின் ஐக்கியம் இருவருக்குமே மரணத்தைக் கொண்டு வந்தது. 

வேதம் கூறுகிறது, ஒரு ஆவிக்குரிய மனிதன் மாம்ச சிந்தையோடு வாழ முடியாது. மாம்சமும், ஆவியும் ஒன்றுக்கொன்று விரோதமானது. ஆவிக்குரிய மனிதன் ஆவிக்குரியவைகளை சிந்தியாமல், ஆவிக்குரியவர்களோடு ஐக்கியம் கொள்ளாமல் மாம்சத்திற்குரியவைகளை சிந்தித்தால் அது மரணத்தில்தான் போய் முடியும். சிம்சோனின் வாழ்வு இதற்கு ஒரு சிறந்த உதாரணம். பெலிஸ்தியரிடமிருந்து இஸ்ரவேலரை மீட்பதற்காக தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டவன். ஆனால் அவனோ ஒரு பெலிஸ்திய பெண்ணின் மீது ஆசைப்பட்டு, அவளோடு நெருக்கமானான். ஆவிக்குரியவனாக வாழ அழைக்கப்பட்டவன், தன் மாம்சமும் மனதும் விரும்பியதையெல்லாம் செய்து இறுதியில் பரிதாபமான மரணத்தை சந்தித்தான். 

ஆம், ஆவிக்குரியவர்களாக வாழ அழைக்கப்பட்ட நாம் நமக்குள் போர் செய்கிற மாம்சத்தின் கிரியைகளை அழித்துவிட வேண்டும். மாம்ச சிந்தை தேவனுக்கு விரோதமான பாவம் என்றும், அவர்கள் தேவனுக்கு பிரியமாய் இருக்கமாட்டார்கள் என்றும் வாசிக்கிறோம். எப்படி மாம்சத்தை ஜெயிப்பது? நம்முடைய சொந்த பலத்தால் அல்ல, நமக்குள் வாசம்பண்ணுகிற பரிசுத்த ஆவியானவர் மாம்ச சுபாவங்களையும், அதன் கிரியைகளையும் எதிர்த்து போராட உதவி செய்கிறார், பெலனளிக்கிறார். ஆம், தேவனுடைய ஆவி நம்மில் வாசமாயிருந்தால், நாம் மாம்சத்திற்குட்பட்டவர்களாயிராமல், ஆவிக்குட்பட்டவர்களாய் இருப்போம். அனுதினமும் பரிசுத்த ஆவியில் நிறைந்த வாழ்க்கை வாழ்வோம். 
-    Mrs. ஜாஸ்மின் சாமுவேல் 

ஜெபக்குறிப்பு:
நமது சிறுவர் இல்ல பிள்ளைகள் பாதுகாக்கப்பட; பரிசுத்தமாய் வாழ ஜெபியுங்கள்.

இந்த தியானச் செய்தியை பெற்றுக்கொள்ள
Whats app: 
தமிழில் பெற -  +91 94440 11864
ஆங்கிலத்தில் பெற - +91 86109 84002
ஹிந்தியில் பெற - +91 93858 10496
தெலுங்கில் பெற - +91 94424 93250

Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.vmmorg.template.msmapp

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250


Comment As:

Comment (0)